மோடி அலையெல்லாம் வீசலையே...: 'ஆம் ஆத்மி' யோகேந்திர யாதவ்
டெல்லி: நரேந்திர் மோடியின் பேரணிகளால் டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கோ அல்லது முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்த்தனுக்கோ எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பிரபல கருத்துக் கணிப்பாளருமான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவது இல்லை. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்தான் மாற்று அரசியல் தலைவர்.

நாங்கள் டெல்லி சட்டசபை தொகுதிகளில் நடத்திய சர்வேயில் 38 முதல் 50 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என தெரியவந்துள்ளது. மொத்தம் 36% வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்றார்.
டெல்லி சட்டசபைக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மும்முனைப் போட்டி இங்கு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications