ஜம்மு காஷ்மீருக்கு வரும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா?: ஒமர் அப்துல்லா கேள்வி
ஸ்ரீநகர்: நாட்டின் பிரதமராக வர விரும்பும் நரேந்திர மோடிக்கு ஜம்மு காஷ்மீருக்கு வரும் தைரியம் இருக்கிறதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, நரேந்திர மோடிக்கு ஓட்டுபோடுபவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும். மதவாதிகளின் கைகளுக்கு நாடு போனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது என்று கூறினார்.

பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். 'மதச்சார்பின்மை என்பது எங்களுடையை ரத்தத்திலும் உள்ளது. காஷ்மீரின் மதச்சார்பின்மையை உங்களது குடும்பம்தான் அழித்துள்ளது. காஷ்மீரில் மதச்சார்பின்மை மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட உங்கள் தந்தைதான் காரணம். காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் கட்டாய இடம் பெயர்வுக்கு நீங்களே பொறுப்பு என்று சாடினார் மோடி.
இதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அளித்த பதிலில், தந்தை ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை. பாரதிய ஜனதா மற்றும் அதன் தோழமை கட்சியின் ஆட்சி காலத்தில்தான் குறிப்பாக, ஜக்மோகன் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த காலத்தில்தான் அவர்கள் வெளியேறினார்கள் என்று கூறினார். மேலும் மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை என்றும் தாக்கியிருக்கிறார் ஒமர் அப்துல்லா.












Click it and Unblock the Notifications