பார்வையற்ற குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய கொடூர ஆசிரியர்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பார்வையற்ற மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை பதிவு செய்து வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கக் கூட நமக்கெல்லாம் சக்தியில்லை என்பதுதான் உண்மை.
கிட்டதட்ட 3 நிமிடங்களுக்கு, 3 கண் பார்வையற்ற குழந்தைகளை அடிக்கின்றார் ஆசிரியர். அந்த ஆசிரியரும் பார்வையற்ற மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்குழந்தைகள் அவரிடம் கெஞ்சுகின்றனர், அழுகின்றனர், பயப்படுகின்றனர். ஆனாலும், அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.
{ventuno}
ஒரு குழந்தையின் தலையை தரையில் வைத்து தேய்க்கின்றார் ஆசிரியர். இன்னொரு குழந்தை அவருக்கு உதவுகின்றது.
அக்குழந்தைகள் அனைவருமே 10 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனை உபயோகித்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா போலீசார் இதுபற்றி கூறியபொழுது, "அந்த ஆசிரியர் கீரின்பீல்ட் பள்ளியை பார்வையற்ற குழந்தைகளுக்காக நடத்தி வருகின்றார். அவரை கைது செய்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் குழந்தைகள் நல ஆணையம் இக்கொடூர சம்பவம் பற்றி தனியாக விசாரித்து வருகின்றது. இப்பள்ளிக்கு நிதி அளித்தவர்கள் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இப்பள்ளி ஒரு டிரஸ்ட் மூலமாக இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் கிட்டதட்ட 62 குழந்தைகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். விரைவில் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்ற குழந்தைகளை இப்படி ஆசிரியரே அடித்துத் துன்புறுத்திய சம்பவம் மனிதத்தின் கேலிக்கூத்து நிலையைத்தான் பறைசாற்றுகின்றது.












Click it and Unblock the Notifications