ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ வழங்கிய ரூ.50 லட்சம்! பாஜக காட்டம்
டெல்லி: சர்ச்சையில் சிக்கியுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கின் என்.ஜி.ஓவிடமிருந்து ராஜிவ் காந்தி பவுண்டேசன், ரூ.50 லட்சம் நன்கொடை பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ஆராய்ச்சி பவுண்டேசனை, கண்காணித்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்நிலையில்தான், 2011ல் ராஜிவ் காந்தி பவுண்டேசனுக்கு, ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜிவ் பவுண்டேசன், பெண் கல்வி மற்றும் ஏழைகளின் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறது. இதுகுறித்து ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ செய்தி தொடர்பாளர் ஆரிப் மாலிக் கூறுகையில், ராஜிவ் காந்தி பவுண்டேசனுக்கு நிதி வழங்கியது உண்மைதான். ஆனால், டாக்கா ரெஸ்டாரண்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்த நிதியை ராஜிவ் பவுண்டேசன், கடந்த ஜூலையில் திருப்பி கொடுத்துவிட்டது.

புரியவில்லை
இதற்கான காரணம் என்ன என்பது ராஜிவ் பவுண்டேசனுக்குத்தான் தெரியும். நாங்கள் இந்த பவுண்டேசன் மட்டுமல்ல மேலும் பல என்.ஜி.ஓக்களுக்கும் கூடத்தான் நன்கொடை கொடுத்துள்ளோம். ஆனால் இது ஏன் சர்ச்சையாகிறது என்பதுதான் புரியவில்லை.

லைசென்ஸ் கொடுத்தார்களே
நன்கொடை கொடுப்பது தப்பா..? என்பதுதான் எனது கேள்வி. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எங்கள் அமைப்பிற்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு தரப்பட்டது. ஆனால் அதற்காக அதிகாரிகளை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அதிகாரிகள் விதிமுறைப்படிதான் எங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு தூண்டுதல்
ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக டாக்கா தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதி வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, அவரது என்.ஜி.ஓ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பீஸ் டிவி என்ற பெயரில் அவர் நடத்தி வரும், சேனலுக்கும், ஜாகிர் நாயக் அமைப்புக்கும் வங்கதேசம் தடை விதித்துள்ளது.

பாஜக விளாசல்
இந்நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை பாஜக கண்டித்துள்ளது. தேச விரோத செயல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்த நன்கொடையை ராஜிவ்காந்தி பவுண்டேசன் பெற்றுள்ளது. நன்கொடை பெற்றபோது மத்தியில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்தான் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications