விடுமுறைக்காக வந்த 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் .. 30 ஆண்கள்!.. வெடித்தது போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் ஒரு ஹோட்டலுக்கு விடுமுறையை கொண்டாட வந்த 16 வயது சிறுமியை 30 ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

Recommended Video

    மணல் கடத்தலை தடுத்த விஏஓக்களுக்கு கொலை மிரட்டல்- வீடியோ

    இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர நகரமான எல்லாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் விடுமுறையை கழிக்க 16 வயது சிறுமி கடந்த வாரம் வந்திருந்தார். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    விடுமுறையை முடித்து கொண்டு வீடு திரும்புவதற்கு முன்னர் அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை இன்னொரு அறைக்கு தூக்கி சென்ற கயவர்கள் அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி 30 ஆண்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    போலீஸார் விசாரணை

    போலீஸார் விசாரணை

    இந்த சம்பவத்தில் 27 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த சிறுமி மதுபோதையில் இருந்ததாகவும், அவராகவே எங்களை ஒவ்வொருவராக அழைத்து உறவு கொண்டார் என்றும் இதற்கு அந்த அறையின் வெளியே வரிசையில் நின்றிருந்தவர்கள் சாட்சி என்றும் கூறியுள்ளார்.

    நேரடி சாட்சியம்

    நேரடி சாட்சியம்

    அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அறைக்கு வெளியே ஆண்கள் கூட்டம் வரிசையாக நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் நேரடி சாட்சியம் அளிக்கவில்லை. இதனிடையே 20 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வேறு வார்த்தைகளே இல்லை.

    போராட்டம்

    போராட்டம்

    இது சிறுமிக்கு மட்டும் எதிரான குற்றம் இல்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். சிறுமி கூட்டு பலாத்காரம் சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. சிறுமிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+