18 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்: 3 படகுகள் பறிமுதல்
கராச்சி: பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் ஞாயிற்றிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இந்த கைது குறித்து பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

வழக்கமாக அத்துமீறியதாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியாவும் கைது செய்து வருகின்றன. நல்லெண்ண அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இருநாடுகளும் அவ்வப்போது விடுவித்து வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லை சரியாக வரையறுக்கப்படாததாலும், மீன்பிடி படகுகளில் தொழில்நுட்பம் இல்லாததாலும் மீனவர்கள் அடிக்கடி எல்லை
தாண்டி சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு போன் செய்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் அவர்களின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து அறிவித்தார். இதையடுத்து அந்நாட்டு சிறையில் இருந்த 171 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications