18 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்: 3 படகுகள் பறிமுதல்
கராச்சி: பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் ஞாயிற்றிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இந்த கைது குறித்து பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

வழக்கமாக அத்துமீறியதாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியாவும் கைது செய்து வருகின்றன. நல்லெண்ண அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இருநாடுகளும் அவ்வப்போது விடுவித்து வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லை சரியாக வரையறுக்கப்படாததாலும், மீன்பிடி படகுகளில் தொழில்நுட்பம் இல்லாததாலும் மீனவர்கள் அடிக்கடி எல்லை
தாண்டி சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு போன் செய்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் அவர்களின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து அறிவித்தார். இதையடுத்து அந்நாட்டு சிறையில் இருந்த 171 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications