துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு- 2,750 நீதிபதிகள் அதிரடியாக கைது
அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2,750 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
துருக்கியில் கடந்த 15-ந் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முறியடித்தனர்.

புரட்சியில் ஈடுபட்டதாக 3,000 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். நீதித் துறையிலும் பலர் புரட்சிக்கு ஆதரவு அளித்தனர். புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த 2750 நீதிபதிகள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பெதுல்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே எர்டோகனின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications