சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு... 2 பேர் காயம்!
சவுத்ஈஸ்டர்ன் லூசியான பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹேம்மண்ட் : அமெரிக்காவின் சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹேமண்ட்டில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது சவுத்ஈஸ்டர்ன் லூசியானா பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பஸில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, இதனையடுத்து பல்கலைக்கழக போலீசார் 4 மணியளவில் அனைவரையும் எச்சரித்துள்ளனர். தற்போது பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழல் இல்லை என்றும், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALERT: No present threat to campus community. University Police confirmed incident occurred on North Campus involving several individuals. Gunshots fired, 2 individuals suffered non-life threatening injuries. UPD following up on all leads, incident remains under investigation. pic.twitter.com/t475HxW87V
— Southeastern LA Univ (@oursoutheastern) February 23, 2018
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள பல்கலைக்கழகம், இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.