சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழு தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி!
ரியாத்: ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தலில் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் வாக்காளர்களாக தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

தேர்தலில் 33 விழுக்காடு வாக்குகளே பதிவான போதிலும், போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் உட்பட அந்த அணியைச் சேர்ந்த ஏழு பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
1). ஷஃபி அஹ்மத் சத்தார் - 1085
2). தில்ஷாத் அஹ்மத் - 1039
3). ஹைதர் அலி - 1014
4) ஒம்மர் நியாஸ் - 968
5) இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் - 940
6). முஹம்மது நஸீருத்தீன் - 917
7). ரோஜி மாவெலில் மாத்யூ - 869
வெற்றி பெற்றவர்களில் திருவாளர்கள் ஹைதர் அலீ, இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் ஆகிய இருவரும் தமிழர்கள் என்பதும், திரு.ஹைதர் அலி ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications