தென்னாப்பிரிக்காவில் பஸ்-லாரி பயங்கர மோதல்: 29 பேர் பலி, 11 பேர் படுகாயம்
ஜொஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் பயணிகள் பேருந்தும், டிரக்கும் மோதிக் கொண்டதில் 29 பேர் பலியாகினர், 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்னாப்பிரிக்க தலைநகர் ப்ரிடோரியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள க்வாகபோன்டெய்ன் நகர் அருகே பயணிகள் பேருந்தும், டிரக்கும் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதில் 29 பேர் பலியாகினர், 11 பேர் படுகாயம் அடைந்தனர். சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரக்கை திருப்பியபோது அது பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடமான மொலோடோ சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. சுமார் 50,000 பேர் ப்ரிடோரியாவுக்கு வேலைக்கு செல்ல குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பேருந்துகள் மூலம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications