துப்பாக்கி முனையில் வாலிபரை பலாத்காரம் செய்து விந்தணுவை சேகரித்த 3 பெண்கள்!
போர்ட்எலிசபெத்: துப்பாக்கி முனையில், வாலிபரை மிரட்டி பலாத்காரம் செய்து அவரது விந்தணுவை 3 பெண்கள் சேகரித்து சென்ற சம்பவம் தென் ஆப்பிரிக்க போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரை சேர்ந்தவர் 33 வயதான மெக்கன்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது, திடீரென பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று, மெக்கன்சியை வழிமறித்து நின்றுள்ளது.

முகவரி கேட்பது போல
அந்த காருக்குள் 3 பெண்கள் இருந்துள்ளனர். அதில் ஒரு பெண் இறங்கி வந்து ஏதோ ஒரு அட்ரசை காண்பித்து, இதற்கு எப்படி போக வேண்டும் என்று வழிகேட்பது போல நடித்துள்ளார். அந்த பேப்பரை வாங்கி, அட்ரசை மெக்கன்சி படிக்க ஆரம்பித்துள்ளார்.

கடத்தல்
அப்போது காருக்குள் இருந்த இரு பெண்கள் மற்றும் கீழே இறங்கிய மற்றொரு பெண் ஆகிய மூவரும் சேர்ந்து, மெக்கன்சியை பிடித்து காருக்குள் இழுத்து போட்டுள்ளனர். இதையடுத்து கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளது.

உசுப்பேற்ற முயற்சி
பயத்தால் திமிறிய மெக்கன்சியை, மூன்று பெண்களும் இறுக்கிப்பிடித்துக் கொண்டனர். இதன்பிறகு, அந்த மூன்று பெண்களும், மெக்கன்சியின் பேண்ட், சட்டை, உள்ளாடையை கழற்றி எறிந்துள்னர். அதேபோல தங்களது ஆடைகளையும் கழற்றிவிட்டு, மெக்கன்சியை தங்களிடம் உறவுகொள்ளுமாறு அழைத்தனர். ஆனால், பயத்தால், மெக்கன்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பலாத்காரம்
இதையடுத்து, ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை, மெக்கன்சி வாயில் அந்த பெண்கள் ஊற்றியுள்ளனர். இதை குடித்ததும், மெக்கன்சிக்கு பாலியல் உணர்வு அதிகரித்தது. இதையடுத்து, மூன்று பெண்களும், மெக்கன்சியை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, வெளியான விந்தணுவை, ஐஸ் பெட்டியில் சேகரித்துள்ளனர்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
இப்படி பலமுறை பலாத்காரம் செய்து விந்தணுவை சேகரித்த பிறகு, போர்ட் எலிசபெத் பகுதியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில், மெக்கன்சியை கீழே இறக்கிவிட்டு அந்த பெண்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து மெக்கன்சி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற சம்பவம் தென் ஆப்பிரிக்க வரலாற்றிலேயே நடக்கவில்லை என்று குழப்பத்தில் உள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications