நினைக்கவே பயங்கரம்! 3 மணிநேரத்தில் 30 முறை ஜப்பானை புரட்டி எடுத்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
டோக்கியோ: ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கி இருப்பதும் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனையடுத்து ஜப்பான் மேற்கு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தன. கடலில் சுனாமி பேரலைகள் 5 மீட்டர் உயரம் வரை எழுந்து நகரங்களைத் தாக்கியது. ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் ஜப்பான் நிலநடுக்க, சுனாமி பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஜப்பான் கடற்கரை ஓர பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். தற்போது நிலநடுக்கம், சுனாமி பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படை களமிறங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜப்பான் அணு உலைகளில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கான அறிவுறுத்தலை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ளது. ஜப்பானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் 3 மணிநேரத்தில் 30 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டி எடுத்துள்ளது.. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் சராசரியாக 4.0 அலகுகளாகப் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம், சுனாமி பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications