இங்கிலாந்தில் வீட்டில் 2 மகள்களுடன் பிணமாகக் கிடந்த இந்திய தம்பதி

இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு மாவட்டத்தில் இருக்கும் கிளேடன் கிராமத்தில் வசித்து வந்தவர் இந்தியரான ஜிதேந்திரா லாட்(49). அவரது மனைவி துக்ஷா லாட்(44). அவர்களின் மகள்கள் த்ரிஷா(19), நிஷா(17). ஜிதேந்திரா இந்த கிராமத்தில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மற்றும் அவரது மனைவி, மகள்கள் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல் சில நாட்களாக வீட்டில் கிடந்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினருடன் நல்லுறவு வைத்திருந்த ஜிதேந்திராவின் குடும்பம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த அழகான, அமைதியான கிராம மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இறந்த த்ரிஷா லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக அவரது தோழி செஹஜ் சிங்(19) தெரிவித்துள்ளார். செஹஜ் மற்றும் த்ரிஷா கடந்த 8 ஆண்டுகளாக தோழிகளாக இருந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications