திடீரென குலுங்கிய நேபாளம்.. நடுங்கிப்போன மக்கள்! 5.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சி
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் தாக்கியதால் அங்கே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குட்டி நாடு நேபாளம். இமய மலைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 3 கோடி தான்.

இமய மலை மற்றும் பணிகளால் சூழப்பட்ட அழகிய நாடான நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அப்படியொரு வலிமையான பூகம்பம் தான் இப்போது நேபாளத்தைத் தாக்கியுள்ளது.
நேபாளத்தில் இன்று அக்டோபர் 22ஆம் தேதி 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. இந்திய நேரப்படி காலை 7.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, எதாவது உயிரிழப்புகள் நிகழ்ந்ததா என்பது குறித்து உடனடியாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
நேபாளத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்திய எல்லைகளிலும் சில இடங்களில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேபாளம் இரண்டு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் எல்லையில் அமர்ந்திருக்கிறது. அதாவது இந்தோ-ஆஸ்திரேலிய மற்றும் ஆசியத் தட்டுகள் இணையும் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த தகடுகளின் மோதல் காரணமாகவே இமயமலை உருவானது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செமி விகிதத்தில், இவை ஒன்றுக்கொன்று எதிராகவும் கீழும் தள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications