சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
பீஜிங்: சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஜிலின் மகாணத்தின் சாங்லிங் அருகே இன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கடியில் 12.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், உயிரிழப்பு ஏற்பட குறைவான அளவே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 200 பேர் பலியாகினர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications