15வது மாடி ஜன்னல் வழியாக இறங்க முயற்சித்த குட்டிப் பாப்பா!

Subscribe to Oneindia Tamil

5-year-old dangles from 15th story window
பீஜிங்: சீனாவில் குழந்தை ஒன்று தனது அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டின் ஜன்னல் வழியாக இறங்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 15 ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த பெற்றோர், தங்களது லில்லி என்ற‌ 5 வயது மகளை மட்டும் தனியே விட்டு வெளியே சென்றுள்ளனர்.

அப்போது தனியே இருந்த சிறுமியுடன் விளையாடவும் யாருமில்லை, பேசவும்ஆளில்லை இந்நிலையில் ஜன்னல் வழியாக மாடியில் வெளிப்புறம் இறங்குவதற்கான விபரீத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது அக்குழந்தை.

சிறுமியின் உடல் பகுதி ஜன்னலுக்கு வெளியே வந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. இதனால் 15 ஆவது மாடிக்கு வெளியே தொங்கிய நிலையில் சிறுமியை கண்டவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொங்கி கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றி உயிர் காத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+