ஆப்கானில் கடும் நிலநடுக்கம்: பாக், இந்திய நகரங்களும் அதிர்ந்தன
Subscribe to Oneindia Tamil
காபூல்/இஸ்லாமாபாத்/ டெல்லி: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் 35 நகரங்களிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையை மையமாக வைத்து நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடஆப்கானின் அஷ்காஸாம் பகுதியில் 90 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதனால் பாகிஸ்தானின் பெஷாவர், காபூல், இஸ்லாமாபாத், லாகூர் உட்பட 35 நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மாநிலங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications