வங்கதேசத்தில் இந்துக்கள் திருவிழா கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 6 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்களின் திருவிழா ஒன்றில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். இத்தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் இருந்து வடக்கு பகுதியில் உள்ளது தினஜ்பூர் மாவட்டம். இங்கு ருஷ்மேளா என்ற திருவிழாவுக்காக இந்து மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்தனர்.

அப்போது அக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.க் கடந்த மாதம் இதே பகுதியில் இத்தாலி மறும் ஜப்பான் நாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இப்படுகொலைக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்தாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications