பைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்
7 வயது சிறுவனை உயிரோடு பெட்டியில் வைத்து கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

வாஷிங்டன்: பைபிள் வசனத்தை மறந்துவிட்டான் என்பதற்காக மகனை அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தி.. கடைசியில் உயிரோடு புதைத்து எரித்து கொன்று விட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்!!
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள்தான் டியா-டினா என்ற அதிசய கொடூர தம்பதி. இவர்களின் மகன் ஏதன். வயது 7.
இந்த நிலையில் ஏதன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டான். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி பெற்றோரை கோர்ட் வரை கொண்டு போய் நிறுத்தியபிறகுதான் விஷயம் வெளியே வர ஆரம்பித்தது.

நினைவில்லை
தினமும் 13 பைபிள் வசனங்களை ஏதன் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என்பது கண்டிஷனாம். ஆனால் சிறுவனுக்கு வசனம் சரியாக நினைவில்லாமல் மறந்துவிட்டிருக்கிறான். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து, அவன் கையில் 19 கிலோ எடை கொண்ட மரத்தை தூக்கியபடியே நிற்குமாறு தண்டனை தந்தார்கள்.

வாக்குமூலம்
அதுமட்டுமில்லை, சிறுவனை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி இருக்கிறார்கள். தினமும் 100 முறை ஓங்கி சிறுவனை குத்துவோம் என்றும், அவனுடையை தலைமீது ஏறி நின்று கொள்வோம் என்று வாக்குமூலத்தில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரோடு எரித்தனர்
கடைசியில், ஒரு சிறிய பெட்டி ஆர்டர் செய்து, அதில் ஏதனை உயிரோடு படுக்க வைத்து, எரித்து கொன்றே விட்டார்கள். இவ்வளவும் பைபிள் வசனங்களை மறந்துவிட்டான் என்பதற்காகத்தான். விசாரணையில் இவர்கள் இருவரும் பெற்ற தாய்-தந்தை இல்லை என்பதும், கார்டியன்கள் என்பதும் தெரியவந்தது.

மனிதர்களே இல்லை
அன்பு-மன்னிப்பு இவை இரண்டும்தான் கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமே. ஆனால், இப்படி பைபிளை காரணமாக காட்டியே சிறுவனை உயிரோடு புதைத்து கொன்ற இந்த தம்பதிகள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, மனிதர்களாக சேர்த்துகொள்ளக்கூட தகுதியற்றவர்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications