For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 குஜராத் மீனவர்களை சிறைபிடித்தது பாகிஸ்தான் கடற்படை.. 12 படகுகளும் பறிமுதல்

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி 70 குஜராத் மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. மீனவர்களின் 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட மீனவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தக் கைதை பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வாஜித் நவாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

70 Gujarat fishermen nabbed near Sindh

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 70 பேரும் பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்திற்கு அருகே கடல் எல்லைக்குள் வந்தபோது கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் கராச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நவாஸ் கூறியுள்ளார்.

முன்னதாக 100 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் 70 பேர் மட்டுமே கைது செய்ய்பட்டுள்ளதாக நவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Pakistan navy has arrested 70 Gujarat fishermen near South Sindh province of Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X