சவுதி அரேபியாயில் நிகழ்ந்த சாலை விபத்து.. 9 இந்தியர்கள் உயிரிழப்பு.. என்ன நடந்தது?
ஜிஷான்: சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிஷான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுக்கு முழுமையாக ஆதரவையும் வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் மொத்தமாக 15 பேர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சாலை விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோல் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் அணுகுவதற்காக பிரத்யேக ஹெல்ப் லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சவுதி அரேபியாவில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அறிந்த போது வேதனையடைந்தேன். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேசினேன். துயரம் மிகுந்த இந்த சூழலில், அவர் நிச்சயம் முழு உதவியையும் செய்வார் என்று பதிவிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications