மாஸ் காட்டிய இந்திய கடற்படை கப்பல்.. ஓமன் கடலில் தத்தளித்த 8 இந்தியர்கள் மீட்பு.. என்ன நடந்தது?
மஸ்கட்: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 16 மாலுமிகள் சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இதில் 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது.
கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. டுக்ம் துறைமுகம் ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்து முக்கிய அங்கமாக உள்ளது.

ஆனால், துறைமுகத்திற்கு சென்று சேர்வதற்கு முன்னரே இந்த கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் இலங்கையை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்வர்கள் 13 பேர் மாலுமிகளாக பயணித்திருக்கின்றனர். எனவே இந்த 13 பேரின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்திற்கானது. இப்படி இருக்கையில் கப்பல் தலைக்கீழாக கவிழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்தை கேள்விப்பட்டவுடன் இந்திய போர்க்கப்பலான INS Teg விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதில், தற்போது வரை 8 இந்தியர்களையும், இலங்கையை சேர்ந்தவர் ஒருவரையும் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது. இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
அதில், "கடந்த ஜூலை 15ம் தேதி, ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த கொமரோஸ் நாட்டு எண்ணெய் கப்பலில் பயணம் செய்த 8 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 9 மாலுமிகளை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS Teg மீட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 13 இந்தியர்கள் இருந்தனர். இந்திய கடற்படை மற்றும் ஓமான் மீட்புப் படையினர் இன்னும் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் அதன் கடல்சார் கண்காணிப்பு விமானமான P-8I, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications