Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வூகானில் குணமடைந்த 90 சதவீதம் கொரோனா நோயாளிகளூக்கு இன்னமும் நுரையீரல் பாதிப்பு.. ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கொரோனா தொற்றுநோய் உருவான சீனாவின் வுஹான் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் மீட்கப்பட்ட நோயாளிகளின் மாதியை ஆய்வு செய்ததில், தொண்ணூறு சதவீதம் பேர் நுரையீரல் இன்னமும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களில் ஐந்து சதவீதம் பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் சராசரியாக 59வயதுக்கு உள்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. ஓராண்டு ஆய்வின் முதல் கட்டம் ஜூலை மாதத்தில் நிறைவைடந்தது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குனர் பெங் ஜியோங் தலைமையில், ஏப்ரல் முதல் 'மீட்கப்பட்ட 100 நோயாளிகளை ஆய்வு செய்தது.

முதல் கட்ட முடிவுகளின்படி, 90 சதவீதம் நோயாளிகளின் நுரையீரல் இன்னும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதாவது அவர்களின் நுரையீரல் காற்றோட்டம் மற்றும் எரிவாயு பரிமாற்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான நபர்களின் நிலைக்கு மீளவில்லை என்று சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவக்குழு ஆய்வு

மருத்துவக்குழு ஆய்வு

பெங்கின் குழு நோயாளிகளுடன் ஆறு நிமிட நடை பரிசோதனையை நடத்தியது. மீட்கப்பட்ட நோயாளிகள் ஆறு நிமிடங்களில் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடியும் என்று அவர்கள் கண்டறிந்தனர், அதே நேரத்தில் மற்ற ஆரோக்கியமானவர்க்ள் 500 மீட்டர் தூரம் நடக்க முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.

மூன்று மாதம் தேவை

மூன்று மாதம் தேவை

மீட்கப்பட்ட சில நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் இயந்திரங்களையே நம்பி வாழ வேண்டியிருக்கிறது, பெய்ஜிங் சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின் டோங்ஜிமென் மருத்துவமனையின் மருத்துவர் லியாங் டெங்சியாவோ இந்த தகவலை தெரிவித்தார். 100 நோயாளிகளில் 10 சதவீதம் பேருக்க கொரோனா வைரஸ் தொற்றுக்க எதிரான ஆன்டிபாடிகள் மறைந்துவிட்டன என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

கொரோனாவில்இருந்து மீண்ட நோயாளிகளில் ஐந்து சதவீதம் பேர் COVID-19 நியூக்ளிக் அமில சோதனைகளில் நெகட்டிவ் முடிவுகளைப் பெற்றனர், ஆனால் இம்யூனோகுளோபூலின் M (IgM) சோதனைகளில் பாசிட்டிவ் முடிவுகளைப் பெற்றனர்.அதாவது 5 சதவீதம் நோயாளிகள் மீண்டும் கொரோனாவால பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது.. இதனால் மீண்டும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் ஐந்து சதவீதம்பேரும் உறுதியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தெரியவில்லை..

நோயாளிகள் மனஅழுத்தம்

நோயாளிகள் மனஅழுத்தம்

100 நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் குறைந்த அளவிலான பி உயிரணுக்களைக் காட்டியதால் அவர்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பது தெரியவந்துள்ளது. நோயாளிகள் மனச்சோர்வு மற்றும் களங்க உணர்வையும் அனுபவித்தனர். நோயில் இருந்து மீண்ட பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரே மேஜையில் இரவு உணவு சாப்பிட தயாராக இல்லை என்று ஆய்வு குழுவிடம் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் குறைவானவர்களே பணிக்குத் திரும்பியுள்ளனர்.

சீன கொரோனா நிலவரம்

சீன கொரோனா நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சீனாவில் உறுதிப்படுத்தப்பட்டகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 84,491 ஐ எட்டியுள்ளது, இதில் 810 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர், 36 பேர் கடுமையான நிலையில் உள்ளனர். 79,047 பேர் குணம் அடைந்துள்ளனர். 4,634 பேர் இந்த நோயால் இறந்துவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+