மேக் அப் அதிகமானதால் நிகழ்ந்த சோகம்; பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிடப்பட்ட இங்கிலாந்து பெண் !

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மேக் அப் அதிகமாக போட்டிருந்த இளம் பெண்ணை பேருந்தில் இருந்து பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற 15 வயது சிறுமி, இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துனர், சஹ்ரா சாதிக்கின் சிறுமிகளுக்கான பயணச் சீட்டை வாங்கி பரிசோதித்துள்ளார்.

A 15-year-old girl get down from bus in uk

பின்னர் உன்னையும் உன் மேக் அப்பையும் பார்த்தால் சிறுமி போல் தெரியவில்லை என்று கூறி அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். மேலும் 35 பவுண்ட் அபராதமும் விதித்துள்ளார். தற்போது இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், அடையாள அட்டை எடுத்துச் செல்லாததால் எனது வயதை நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் என்னுடைய பள்ளி புகைப்படங்களை காட்டியபோதும் அதை நடத்துனர் நம்பவில்லை என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+