டிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்!
சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.
ரியாத்: சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கு இடையில் தற்போது பிரச்சனை நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இதனால் உலக நாடுகள் எதுவும் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாது.

இதையடுத்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்ய பயன்படுத்தும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.
இந்த நிலையில் நேற்று முதல்நாள் சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது. இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அங்கு தற்போது அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது. செங்கடலின் முடிவில் பெர்ஷியன் கடல் இணையும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஏமனில் உள்ள ஹுதி போராளி அமைப்பு மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பு ஆகும். இதனால் ஈரான்தான் இந்த தாக்குதலை நடத்த சொல்லி இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பைப் லைன் சுமார் 1300 கிமீ நீளம் கொண்டது. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அடைத்தால், இந்த பைப்லைன் மூலம் மட்டுமே சவுதி எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் தற்போது அதுவே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதி எண்ணெய் ஏற்றுமதி செய்வது சில நாட்களில் தடைபடும்.
இதை சரி செய்ய எப்படியும் 6 மாதங்கள் வரை ஆகும் என்று சவுதி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி கூறியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications