எட்டாவது மாடியில் நிர்வாணமாக ஏசியை பிடித்து தொங்கிய வாலிபர்... ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பீஜிங் : தமிழ் திரைப்படங்களில் கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய சீன் வைக்கும் போது அந்த பெண்ணின் கணவர் திடீரென வந்து விட்டால் பரண் மீதோ, கட்டிலுக்கு அடியிலோ பதுங்கிக் கொள்வார்கள்.

சைனாவில் காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது காதலியின் கணவர் வந்ததால் தப்பிக்க முயற்சித்த காதலன் நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்துக் கொண்டு தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

எட்டாவது மாடியில் எந்த உடையும் இன்றி ஒருவாலிபர் நிர்வாணமாக தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படாதா என்ன? கடவுளே... கடவுளே என்று கூறியவாரே அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார்கள்.

இவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்த போது அந்த பெண்ணின் கணவர் வந்து விட்டதால் இவர் தப்பித்து ஏசியைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தாரா? அல்லது காதலியின் கணவர் வீட்டுக்குள் வந்ததை அறிந்து தப்பிப்பதற்காக ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தாரா? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் நிர்வாண கோலத்தில் ஏசி-யை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டனர். பாவம் தப்பிக்க நினைத்து இப்போது அனைவரின் கண்களிலும் காமிராக்களிலும் வகையாக சிக்கிக் கொண்டார் இந்த வாலிபர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+