For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்: பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை!

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவருக்கு தான் அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்கள் வந்தன. இதனால் மனமுடைந்த அவர் பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Google Oneindia Tamil News

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 18 பள்ளி மாணவிக்கு பேஸ்புக்கில் தான் அழகாக இல்லை என கூறப்பட்டதால் மனமுடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டி வேலா என்ற 18 வயது பள்ளி மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அதனை பார்த்த பலர் பிராண்டி வேலா மிக குண்டாக இருப்பதாகவும் அழகாக இல்லை என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.

A School girl commit suicide in front of her parents in US!

இதனை பார்த்த பிராண்டிவேலா மனமுடைந்து போனார். பின்னர் அவர் தனது தங்கை ஜாக்கிலினுக்கு 'உன்னை நேசிப்பதாகவும், தயவு செய்து இதனை நினைவில் வைத்துக்கொள், எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு' எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ந்து போன ஜாக்கிலின் அதனை தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக பிராண்டிவேலாவின் படுக்கையறைக்கு ஓடினர்.

அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த பிராண்டிவேலா தான் குண்டாக அசிங்கமாக இருக்கிறேன் கூறியுள்ளார். மேலும இதனால் சாகப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நீ அழகாகதான் இருக்கிறாய் என கூறி கெஞ்சியுள்ளனர். ஆனால் தனது முடிவில் தீர்க்கமாக இருந்த பிராண்டிவேலா பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

English summary
In America a 18 years School girl commit suicide front of her parents. for comment on face book for her photo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X