அமெரிக்காவில் மீண்டும் ஒரு இனவெறி சம்பவம்.. லெபனானுக்கு திரும்பிப்போ என சீக்கிய பெண்ணிடம் மிரட்டல்
லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்: லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் இந்தியர்கள் உட்பட வெளி நாட்டினர் கொல்லப்பட்டு வரும் நிலையில் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இனவெறி சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்பிரீத் ஹெயர் என்ற சீக்கிய அமெரிக்க பெண் நியூயார்க் மெட்ரோ ரயிலில் அமெரிக்கர் ஒருவரால் லெபனான் நாட்டுக்கு திரும்பிப்போ என மிரட்டியுள்ளார்.
ராஜ்பிரீத் ஹெயர் என்ற பெண் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், "அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா உனக்கு? இந்த நாட்டுக்கு அவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் தெரியுமா உனக்கு?" எல்லாம் உன்னை போன்ற ஆட்களால்தான் என கூறியுள்ளார்.

லெபனானுக்கு திரும்பிப்போ
மேலும் தகாத வார்த்தைகளார் திட்டிய அவர் "லெபனானுக்கு திரும்பிப் போ. எந்த வகையிலும் இந்த நாட்டை சேர்ந்தவராக நீ ஆகிவிட முடியாது" என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்களும் கவனித்து வந்துள்ளனர்.

இந்த வார இனவெறி
இந்த செய்தியை அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்த வார இனவெறி என்ற பகுதியில் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் பதவியேற்றத்தில் இந்த வாரா இன வெறி என்ற தலைப்பில் இனவெறி சம்பவங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.

தவறாக புரிந்து கொண்ட அமெரிக்கர்
இந்த வாரம் ராஜ்பிரீத் ஹெயர் விவகாரம் அந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. உண்மையில் ராஜ்பிரீத் ஹெயர், அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் லெபனான் நகரில் பிறந்தவர். அவர் லெபனான் நாட்டை சேர்ந்தவர் என அவரை தவறுதலாக புரிந்து கொண்டு அந்த அமெரிக்கர் திட்டியுள்ளார்.

வெளிநாட்டினரிடையே அதிர்ச்சி
இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள ராஜ்பிரீத் ஹெயர், சிறுபான்மையினராக இருப்பவர்கள் இதுபோன்ற அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் மீதான அமெரிக்கர்களின இனவெறித் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளி நாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications