For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம்..ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு..

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானின் கடலோரப்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.

டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ., ஆழத்தை மையமாக வைத்து அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

japan

சில தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong earthquake has struck off an island chain south of Tokyo, but officials say there is no danger of a tsunami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X