Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசா, மேற்கு கரையில் இனி வரும் நாட்கள் நரகமாக இருக்கும்! ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

காசா: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இனி வரும் நாட்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நெருக்கடிகள் அதிகரிக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.

சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மாநாடு நடைபெற்றது. இதில், ​​மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட், காசா மற்றும் மேற்கு கரையில் இனி வரும் நாட்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இந்த பகுதிகளில் மக்கள் விரோதத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Palestine Israel UNO

"இஸ்ரேலின் தாக்குதல் இப்பிராந்தியத்திற்கு மேலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கங்கள் சட்டப்பூர்வமானது கிடையாது. சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா தீர்மானங்களை அப்பட்டமாக இஸ்ரேல் மீறுகிறது. அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மருத்துவமனைகள், ஐநா அலுவலகங்களை தவிர ஏறத்தாழ அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த போரில் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐநா அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பின்னணி: பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+