"குக்கூ குக்கூ".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே "விஸ் விஸ்"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா?
டெல்லி: துருக்கியில் வடக்கு பகுதியில் உள்ள மலைபாங்கான பகுதிகளில் துருக்கி மொழியை பேசாமல் விசில் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வினோதம் நடைபெறுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாமல் தொலைதூரங்களில் இருந்த போது விசில் மொழி மூலம் மட்டுமே தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஓயாக்சாகா, மெக்சிகோ, ஆப்பிரிக்காவின் அட்லாஸ் மலைகள், பிரேசிலியன் அமேசான், வடக்கு லாவோஸ் மற்றும் கேனரி தீவுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த விசில் மொழி தற்போது துருக்கி நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தங்கள் பெயரை சொல்லவும், வீட்டில் என்ன சமைத்தாய் என கேட்கவும் கூட இந்த விசில் மொழியை பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் சிறந்த விசில் மொழியாளர் மூசஸ் கோசக் கூறுகையில் சிறு வயது முதல் இந்த விசில் மொழியை பயன்படுத்தி வருகிறேன்.

விஷயம்
இந்த மொழிக்கு குஷ் டிலி என பெயராகும். இதை இன்றும் அப்பகுதி மக்கள் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வேகமாக தகவலை பரிமாறிக் கொள்ள முடிகிறது என்கிறார்கள். இந்த மொழி 300-ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது. விசில் மூலம் என்னால் எந்த விஷயத்தையும் தெரிவிக்க முடியும்.

நாக்கை மடித்து
ஒவ்வொரு விரல்களை பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசமான ஒலிகள் எழும். கட்டை விரல்கள் குறைந்த ஒலியையும் சுண்டு விரல்கள் அதிக சப்தத்தை எழுப்பவும் பயன்படுத்தலாம். நாக்கை மடித்துக் கொண்டு விசில் அடித்தாலும் அதிக ஒலியை எழுப்பும்.

குறைந்த ஒலி
அதிக ஒலி எழுப்பினால் நீண்ட தூரத்திற்கு செல்லாது. ஆனால் குறைந்த ஒலிகள் நீண்ட தூரத்திற்கு செல்லும். அதிக தூரத்திற்கு ஒலி செல்ல வேண்டும் என்றால் நடுவிரல்களை கொண்டு விசில் அடிக்க வேண்டும். இந்த மொழி எங்கள் கிராமத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் 100 பேரில் 50 பேர் மட்டுமே இந்த மொழியை பேசுகிறார்கள்.

மொழி
செல்போன்கள் வந்ததால் மக்கள் இந்த மொழிகளை பேசுவதில்லை, சில ஆப்பிள் பழங்களை பறித்து வா என தூரத்தில் இருந்து நாங்கள் கூறினாலும் அது அந்த ஆப்பிள் மரத்திற்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இந்த மொழியை நாங்கள் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.

விசில் மொழி
அது போல் லஷ் மலைத்தொடர்களில் உள்ள கிராமங்களில் பறவைகள் மொழி பேசப்படுகிறது. இந்த மொழி கலாச்சார சின்னம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்ஹான் என்பவர் கூறுகையில் நான் விசில் மொழி பயிற்சியாளர். நான் மட்டுமே இந்த மொழியை கற்றுக் கொடுக்கிறேன். விசில் மொழியையும் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எனது லட்சியம்.

படிப்படியாக
தொழில்நுட்பத்துடன் நாங்கள் போராடி வருகிறோம். தூரத்தில் இருப்பவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது நல்ல கருவிதான். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிப்பாகும். இந்த மொழியை கற்றுக் கொடுக்க ஒரு பள்ளியும் இருந்தது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் 160 மாணவர்கள் பயின்றனர். தற்போது 2016இல் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications