தலிபான் தாக்குதல்.. ஏஎப்பி நிருபர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் பலி!
Subscribe to Oneindia Tamil
காபூல்: காபூலில் ஒரு ஓட்டல் ஒன்றின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அங்கு தங்கியிருந்த ஏஎப்பி (Agence France-Presse) செய்தி நிறுவனத்தின் நிருபரும் அவர் மனைவி குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
அந்த நிருபர் பெயர் சர்தார் அகமது (40). சொந்தமாக காபூலில் செய்தி நிறுவனம் நடத்தியவர் பின்னர் ஏஎப்பியில் சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஏஎப்பிக்கு செய்தியாகத் தந்து வந்தார்.
நேற்று மாலை அவர் தங்கியிருந்த ஓட்டல் மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சர்தார் அகமதுவும் அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மூன்றாவது மகன் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறான்.












Click it and Unblock the Notifications