ஒ மை காட்.. வட கொரியா விட்ட ஏவுகணை.. 10 நிமிட "கேப்"பில் தப்பிய ஏர் பிரான்ஸ்!
பியாங்யாங்: வட கொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு 100 கிலோமீட்டர் அருகே பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 ஏவுகணையாகும். இதை ஜூலை 28ம் தேதி வட கொரியா ஏவிப் பரிசோதித்தது. இதன் பிறகுதான் ஒட்டுமொத்த அமெரிக்காவும் எங்களது விரலுக்குக் கீழே என்று சவால் விட்டிருந்தார் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்.
தற்போது அந்த ஏவுகணை சோதனையின்போது நடந்த ஒரு பரபரப்புச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விமானத்துக்கு அருகே
வட கொரிய ஏவுகணை கடந்த பகுதியில்தான் சில நிமிட இடைவெளியில் டோக்கியா - பாரீஸ் இடையிலான ஏர் பிரான்ஸ் விமானம் வந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகணையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன.

330 பேருடன்
அந்த ஏர் பிரான்ஸ் விமானம் 330 பேருடன் வந்துள்ளது ஜஸ்ட் மிஸ் என்பது போல ஏர்பிரான்ஸ் விமானம் தப்பித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

10 நிமிடத்தில்
ஏவுகணை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் விமானம் 10 நிமிடம் கழித்து கடந்து சென்றுள்ளது. ஒரு வேளை 10 நிமிடத்திற்கு முன்பு அது கடந்திருந்தால் நிச்சயம் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கும்.

சுதாரித்தது ஏர் பிரான்ஸ்
இந்த சம்பவத்தையடுத்து தனது வி்மானங்கள் செல்லும் பகுதியை மாற்றியமைத்து அறிவித்துள்ளது ஏர் பிரான்ஸ் நிறுவனம். முன்னெச்சரிக்கையாக இதை செய்துள்ளதாக அது அறிவித்துள்ளது.

கண்டுக்காத வட கொரியா
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும் பகுதியில் அதிக அளவில் விமானங்கள் செல்வது வழக்கம். எனவே அங்கு சோதனை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் கூட வட கொரியா அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை.

உக்ரைன் சம்பவத்தை மறக்க முடியுமா?
இப்படித்தான் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் கிழக்கு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய தயாரிப்பு பக் ஏவுகணை தாக்கி ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தகர்க்கப்பட்டது. அதில் பயணம் செய்த 283 பேரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications