அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஏர் இந்தியா மேலாளர்
அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு ஏர் இந்தியா மேலாளர் உதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபி: அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு ஏர் இந்தியா மேலாளர் நவீன் குமார் உணவு வழங்கியதோடு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த 14 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கு அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு அபுதாபி தமிழ்ச் சங்க தலைவர் ரெஜினால்டு தொழிலாளர் நலத்துறையை அணுகுவதற்கு உதவி செய்தார். அதன் காரணமாக அவர்கள் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரியிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதன் பின்னர் ஏர் இந்தியா மேலாளர் நவீன் குமார் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி ஆதரித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் ஏர் இந்தியா மேலாளர் மற்றும் தமிழ்ச் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications