அல்ஜசீராவின் செய்தியாளர்கள் மூவருக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து கோர்ட் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மூவருக்கு எகிப்து நீதிமன்றம் அதிரடியாக 7 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சிக்கு ஆதரவாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன என்பது எகிப்து அரசின் புகார். இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு 4 அல்ஜசீரா செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எகிப்து நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டோரில் ஒருவரான அல்ஜசீராவின் அப்துல்லா எல்ஷமி, தம்மை எகிப்து அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் எல்ஷமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முறையீடு செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட எகிப்து அரசு அவரை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை என்றது. இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

எஞ்சிய 3 அல்ஜசீரா செய்தியாளர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கெய்ரோ நீதிமன்றம் அனைவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+