துபாயில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அல் நூர் ஃபன் ஃபேர்
Subscribe to Oneindia Tamil

துபாய் அல் பர்ஷா பகுதியில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அல் நூர் பயிற்சி மையம் அக்குழந்தைகளுக்காக ஃபன் ஃபேர் என்ற நிகழ்ச்சியை இன்று நடத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
கால்பந்து போட்டி, டிஸ்கோ போட்டி, கலை பொருட்கள் செய்யும் போட்டி, வினாடி வினா, ஒரு ஓவர் கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.இது தவிர குழந்தைகள் மகிழ மேஜிக் ஷோ, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அந்த தொகை அல் நூர் பயிற்சி மைய குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications