அவனா நீயி..? நான் 'அவன்' இல்லை: ஜூனியர் மல்லையா
நியூயார்க்:தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா(27). வெளிநாட்டில் பிறந்து படித்த அவருடன் நடிகை தீபிகா படுகோனே சில காலம் சுற்றினார். ஐ.பி.எல். போட்டி நடக்கையில் விஜய் மல்லையாவை வைத்துக் கொண்டு ஊரே பார்க்கையில் தீபிகாவும், சித்தார்த்தும் லிப் டூ லிப் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சோலோவாக (?) இருக்கும் சித்தார்த் மல்லையாவிடம் பலர் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளனர். அனைவரும் அவர் ஓரினச் சேர்க்கையாளரா என்று தான் கேட்டுள்ளனர். அவர் இது தொடர்பாக மூன்று வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இறுதியாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுகையில்,
நான் நிச்சயமாக ஓரினச்சேர்க்கையாளன் கிடையாது. என் நெருங்கிய நண்பன் ஓரினச்சேர்க்கையாளன். ஆனால் நான் இல்லை. நான் ஓரினச் சேர்க்கையாளன் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அப்படி இல்லை.
நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் உங்கள் அம்மா கவலையில் இருப்பாரே என்று ஒருவர் கேட்டதற்கு சித்தார்த் கூறுகையில், நான் செய்த பிற காரியங்களால் என் அம்மாவை கவலை அடைய வைத்துள்ளேன். ஆனால் ஓரினச்சேர்க்கை அதில் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்.
அவரும் நான் அவன் இல்லை என்று கூறி வருகிற போதிலும் மீண்டும் மீண்டும் அவரிடம் அதே கேள்வியை கேட்டு வருகிறார்கள் பலரும்.