அங்கேயும் பேசும் இங்கேயும் பேசும் அமெரிக்கா! பாலஸ்தீனர்கள் பலி, இஸ்ரேலுக்கும் பொறுப்புள்ளதாக கருத்து
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் படைகள் 28வது நாளாக இன்றும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 27 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 28வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 9,061 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் தீர்மானங்களை முன்வைத்தன. ஆனால் இந்த தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டது. இதன்பின்னர் கடந்த 25ம் தேதியன்று நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதன் மீது மொத்தமுள்ள 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. மற்ற நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வலியுறுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி வரை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பொதுமக்களின் கார்களை பீரங்கி கொண்டு சுட்டு வீழ்த்துவதை போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலின் கொடூர முகத்தை காட்டுவதாக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை நியாப்படுத்தும் விதமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதாவது, "ஹமாஸை பொறுத்த அளவில், அது பெண்களையும், குழந்தைகளையும் கேடயமாக பயன்படுத்துகிறது. இச்செயல் திட்டமிட்ட தந்திரம். அவர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு அடியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் மோதலில், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பும் இஸ்ரேலுக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் 9000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆண்டனி பிளிங்கனின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications