ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்து சிரியா எல்லை நகரம் மன்பிஜி மீள்கிறது
அங்காரா: சிரியாவில் துருக்கி எல்லையோர நகரங்கள் அமெரிக்கா உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிரியா மற்றும் குருது படைகள் படிப்படியாக மீட்டு வருகின்றன.
சிரியாவின் பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத கும்பல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலையிலான பன்னாட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவும் சிரியாவில் தாக்குதல் நடத்தியது. ரஷ்யா படையினர் சிரியாவில் உள்ள கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ளனர். துருக்கி எல்லையில் அமெரிக்கா ஆதரவுடன் குர்திஸ்தான் ராணுவமும் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிரியாவின் எல்லை நகரமான மன்பிஜியை சிரியா- குர்திஸ்தான் படைகள் எந்த நேரத்திலும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் மன்பிஜியில் இருந்து துருக்கிக்கு செல்லும் சாலையை சிரியா- குர்திஸ்தான் படை துண்டித்துள்ளது. துருக்கி எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் இனி வெளியேறுவது ஆபத்தான ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இன்னமும் மன்பிஜி நகரில் முகாமிட்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நகரை கைவிட்டு பின்வாங்குவதைத் தவிர வேறுவழியில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications