சவுதியில் தவிக்கும் தமிழரா?: 050 - 6232870 என்ற எண்ணை தொடர்பு கொள்க
தம்மாம்: சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் நிர்வாக குழு கூட்டம் 30.10.2015 அன்று தலைவர் காயல் அபூபக்கர் தலைமையில் தம்மாம் தலைமை நிலையத்தில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அவதியுறும் தமிழர்களுக்கு போதிய வழிகாட்டல் ஆலோசனை வழங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 5 பேர் கொண்ட உதவிக் குழு அமைக்கப்பட்டது.
உதவிக் குழு உறுப்பினர்களாக
சிஹாத் - சலாம் கான்
அல்ஜுபைல் - ஆசிக்
அல்கோபார் - முகம்மது நிவாஸ்
அல்ஹஸ்ஸா - முகம்மது அலி ஜின்னா
தம்மாம் - ஹபீப்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா செயல்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. பாதிப்புக்குள்ளாகும் தமிழர்கள் உதவி மையத்தின் அலைபேசி எண் 050 - 6232870 இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் முகம்மது வசீம்(கர்நாடகா),தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி(தமிழ்நாடு)ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிஹாத், கோபார், அல்ஹஸ்ஸா, அல் ஜுபைல், தம்மாம் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.