Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மெகா பிரச்சினை.." ஆட்டம் காணும் சீனா? வேறுவழியின்றி எடுத்த அதிரடி முடிவு! கவனிக்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மக்கள் தொகை பிரச்சினையைச் சரி செய்ய ஓரளவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் மக்கள் தொகை எப்போதும் பிரச்சினையாகவே இருந்துள்ளது. கடந்த 40, 50 ஆண்டுகளாக மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை என அவர்கள் கூறி வந்த நிலையில், இப்போது அது அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.

 As population continue to fall, China To Cover Several Fertility Treatments

இத்தனை காலம் சீன அரசு மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக ஒரு குழந்தை திட்டத்தை அங்கே கடுமையாக அமல்படுத்தினர்.

அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றிருந்தால் அரசின் பல சலுகைகள் பறிக்கப்படும். அவ்வளவு ஏன் அரசு வேலைகளில் கூட சேர முடியாது. திருமணமாகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தடை இருந்தது. மக்கள் தொகையால் பிரச்சினையைச் சந்திக்கும் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா இதைக் கடுமையாக அமல்படுத்தியது. இதனால், அங்கு மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தே வந்தது.

திட்டமிட்டபடி மக்கள் தொகை குறைந்து வருவது நல்லதுதானே.. அவர்கள் பிளான் வெற்றியடைந்துள்ளது தானே எனக் கேட்கலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது அவர்களுக்குப் பிரச்சினையையே தரும். இப்போது அங்கு வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாகவே உள்ளனர். இருப்பினும், அடுத்து வரும் காலத்தில் குழந்தை பிறப்பு தொடர்ந்து குறைந்தால், வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்களின் மக்கள் தொகை குறைந்து வயதான மக்கள் தொகை அதிகரிக்கும். இது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

ஜப்பான் இப்போது இதே பிரச்சினையைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மக்கள்தொகையை அதிகரிக்கச் சீனா பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. அங்கு சில மாகாணங்களில் ஏற்கனவே திருமணமாகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள இருந்த தடை நீக்கப்பட்டது. சீன அரசு இப்போது மற்றொரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது, குழந்தை பெற்றுக் கொள்ள உதவும் 16 வகையான மருத்துவச் சிகிச்சைக்கு அந்நாட்டு அரசு நிதியளிக்கும் என்று அறிவித்துள்ளது. இன்-விட்ரோ கருத்தரித்தல், கரு மாற்று அறுவை சிகிச்சை, உறைதல் மற்றும் விந்து சேமித்தல் ஆகியவை ஆகியவையும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன மக்கள் இந்த சிகிச்சைகளை எந்தவொரு செலவும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த 60 ஆண்டுகளில் சீன மக்கள் தொகை முதல் முறையாகச் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் குழந்தை பிறப்பு என்பது ஆண்டுக்கு 1,000 பேருக்கு 6.77 எனக் குறைந்துள்ளது. இது வரும் காலத்தில் மேலும் குறையும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே சீன அரசு இப்போது இந்த இலவச சிகிச்சை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில் சட்டங்களை மாற்றுவது குறித்த வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இருப்பினும், குழந்தை வளர்ப்பிற்கு அதிக நிதி தேவைப்படுவதால் இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் சீன அரசு மேலும் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+