உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்?
டமாஸ்கஸ்: பல ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Recommended Video
கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் வாக்களிக்க 12 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிரியா அதிபர் தேர்தல்
பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வாக்களிக்கலாம். தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் ஆசாத் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்தல்லா, மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்

உலக நாடுகள் கருத்து
இருப்பினும், இந்தத் தேர்தல் வெறும் கண் துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும் ஆசாத் அதிபர் பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் பிரான்ஸ். ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

சிரியா அதிபர் ஆசாத்
சிரியா அதிபர் ஆசாத், அவரது தந்தையின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் அதிபரானார். அதன் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் ஆசாத் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகளை நடத்தியே அவர் வெற்றி பெற்றதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

உள்நாட்டுப் போர்
கடந்த 2011ஆம் ஆண்டு ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகப் பெரியளவில் திரண்டு, அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். அவர்களை ராணுவத்தின் துணையுடன் மிகவும் மூர்க்கமான முறையில் ஒடுக்கினார் ஆசாத். அப்போது முதலே சிராயாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெறுகிறது. அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் 3.88 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications