இந்தியாவில் “ஸ்மார்ட்” நகரங்கள்- மோடியின் கனவிற்கு ஆஸ்திரேலியா “சப்போர்ட்”
Subscribe to Oneindia Tamil
பிரிஸ்பேன்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா உதவும் என்று பிரிஸ்பேன் நகர மேயர் லார்ட் கிரகாம் குயிர்க் தெரிவித்துள்ளார்.
மோடியின் கனவான இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும் உதவிகள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த குடிநீர் வசதி, கழிவு நீர் போக்கு வசதிகள் போன்ற வாழ்வதற்கு அத்தியாவசியமான வசதிகள் அனைத்தையும் ஸ்மார்ட் நகரங்களில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக பிரிஸ்பேன் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, குவின்ஸ்லேண்டின் பிரிமியர் மற்றும் கேம்பெல் நியூமேன் ஆகியோருடன் இணைந்து வரவேற்பு அலித்தார் குயிர்க்.
பிரிஸ்பேன் மக்கள் மோடியின் செயலபாடுகளில் பெரும் ஆர்வமும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர் என்றும் குயிர்க் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications