ஐஎஸ் இயக்கத்தில் சேர விரும்பிய 14 வயது சிறுவனுக்கு 24 மாத சிறை... ஆஸ்திரியாவில்!
Subscribe to Oneindia Tamil
வியன்னா : ஆஸ்திரியாவில் ஐஎஸ் இயக்கத்தில் சேர விரும்பிய 14 வயது சிறுவனுக்கு 24 மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தோடு கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரியா வந்தான். ஆஸ்திரியாவில் சாங்கட் போய்ல்டன் நகரில் பள்ளி ஒன்றில் படித்து வந்த அச்சிறுவன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்துள்ளான்.

இதற்காக வியன்னாவில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு, வெடிபொருள்களை வாங்கி சேர்த்துள்ளான் அச்சிறுவன்.
இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் அவனை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 14 வயது சிறுவனுக்கு 24 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. பின்னர் அவனது வயதை காரணம் காட்டி அதை 8 மாதமாக குறைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications