வாஜ்பாய்க்கு விருது தந்த வங்கதேசம்.. நேரில் பெற்றார் மோடி
டாக்கா: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வங்கதேசம் போர் விடுதலை (Award of Liberation War) விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது. இந்த விருதை வாஜ்பாய் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பெற்றுக் கொண்டார்.
இன்று டாக்காவில் நடந்த விழாவின்போது வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட இந்த. கெளரவத்தை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். வங்கதேசத்து உயரிய விருதாகும் இது. வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியதற்காக இந்த கெளரவத்தை வங்கதேசம் அளித்துள்ளது.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமத் இந்த விருதினை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் மோடி கூறுகையில், இது அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் சிறந்த முக்கியமான நாளாகும். தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய். சாமானிய மக்களின் உரிமைக்காக போராடியவர். என்னைப் போன்ற எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு, உந்து சக்தியாக திகழ்பவர் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications