பஹ்ரைனில் இறந்த சிறுமியின் பீஸை கட்டுமாறு இந்திய தம்பதியை வற்புறுத்திய பள்ளி
பஹ்ரைன்: பஹ்ரைனில் வசிக்கும் இந்திய தம்பதியிடம் அவர்களின் இறந்த மகளின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜோபி செரியன். அவரது மனைவி ஷைனி பிலிப். அவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக பஹ்ரைனில் வசித்து வருகிறார்கள். அவர்களின் மகள் அபியா ஷ்ரேயா ஜோபி. அவர் பஹ்ரைன் இந்திய பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அபியாவுக்கு அம்மை ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
ஒரே மகளை இழந்து வாடும் ஷைனிக்கு பள்ளியில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. உங்கள் மகளின் கல்விக் கட்டணம் பாக்கியுள்ளது அதை உடனே செலுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என் மகள் ஜனவரி மாதமே இறந்துவிட்டார் அவர் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி திறந்தபோது சேரவில்லை என்று ஷைனி தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை.
10 நாட்கள் கழித்து பள்ளி அதிகாரிகள் ஷைனியை மீண்டும் தொடர்பு கொண்டு கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இது குறித்து ஜோபி செரியன் கூறுகையில்,
எங்களின் ஒரே மகளை இழந்துவிட்டு நிற்கிறோம். இந்நிலையில் பள்ளியில் இருந்து எனது மனைவியை தொடர்பு கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கூறி அவரின் வேதனையை அதிகரித்துள்ளனர். எங்கள் மகள் இறந்துவிட்டாள் அதனால் அவள் பெயரை பள்ளி ஆவணங்களில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று அவர் தெரிவித்தும் கேட்கவில்லை என்றார்.
பள்ளி அதிகாரிகள் தங்களின் செயலுக்காக பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பள்ளியின் தலைவர் பிரின்ஸ் நடராஜன் கூறுகையில்,
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த மாணவியின் பெற்றோரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications