பின்னழகை எடுப்பாக்க ஊசி போட்டு உயிரை இழக்கும் வெனிசுலா பெண்கள்
காரகஸ்: வெனிசுலாவில் பின்னழகை எடுப்பாக ஆக்க ஊசிப் போட்டுக் கொள்ளும் பெண்கள் பின்விளைவுகள் ஏற்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பல அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாடு வெனிசுலா. வெனிசுலா இதுவரை 6 பிரபஞ்ச அழகி, உலக அழகி மற்றும் சர்வதேச அழகிப் பட்டங்கள் மற்றும் 1 மிஸ் எர்த் பட்டத்தை வென்றுள்ளது.
இப்படி அழகிப் போட்டிகளில் வெல்லும் வெனிசுலா பெண்கள் ஆபத்தான ஒரு ஊசியால் உயிர் இழக்கின்றனர்.

பின்னழகை கூட்ட
வெனிசுலா நாட்டு இளம்பெண்கள் தங்கள் பின்னழகை எடுப்பாக காட்ட சிலிகான் ஊசி போட்டுக் கொள்கின்றனர்.

ஊசிக்கு தடை
சிலிகான் ஊசிக்கு வெனிசுலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் திருட்டுத் தனமாக அந்த ஊசியை அழகு நிலையங்கள் மற்றும் ஜிம்களில் வைத்து போட்டுக் கொள்கின்றனர்.

உயிரைப் பறிக்கும் அழகு
பின்னழகை எடுப்பாக்கப் போடும் ஊசியால் கடந்த 12 மாதங்களில் மட்டும் 17 பெண்கள் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்த ஊசியை பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தவில்லை.

30 சதவீத பெண்கள்
வெனிசுலாவில் உள்ள பெண்களில் 18 முதல் 50 வயது வரை உள்ள 30 சததவீதம் பேர் இந்த சிலிகான் ஊசியை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 2,000 பெண்கள் இந்த ஊசியை வீட்டிலோ அல்லது சட்டவிரோத மையங்களிலோ போட்டுக் கொள்கிறார்களாம். இந்த ஊசியின் விலை ரூ. 505 ஆகும்.

வங்கிக் கடன்
வெனிசுலா பெண்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 20 சதவீதத்தை அழகு சாதன பொருட்களுக்கு செலவிடுகிறார்களம். மேலும் மாதாமாதம் குறைந்தது 4,000 பெண்கள் அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள பெண்களுக்கு வெனிசுலாவில் உள்ள பல வங்கிகள் கடன் தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications