கார் கண்ணாடிகளை உடைத்து பெல்ஜியம் பிரதமரின் லேப்டாப் திருட்டு
Subscribe to Oneindia Tamil
புரூசெல்ஸ்: பெல்ஜியம் நாட்டு பிரதமரின் காரில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் எலியோ டிருபோ. இவர் தலைநகர் புரூசெல்ஸ்சில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது தனது லேப்டாப்பை காரிலேயே வைத்துச் சென்றுள்ளார்.

பிரதமர் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த சமயத்தில் பொழுதுபோக்குவதற்காக அருகிலிருந்த புத்தக கடைக்கு புத்தகம் வாங்கச் சென்றுள்ளார் பிரதமரின் டிரைவர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த லேப்டாப் மற்றும் சில ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.
டிரைவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரதமரின் லேப்டாப்பைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications