மன அழுத்தமா... ஓடிப் போய் பாத்திரம் கழுவுங்க... காணாமப் போய்டும்!
நியூயார்க்: சமையலையில் உள்ள அழுக்குப் பாத்திரங்களை முழு கவனத்தோடு கழுவினால் மன அழுத்தம் குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகின்றது.
விதவிதமாக சமைத்து, மற்றவர்கள் வயிறார பசியமர்த்தும் போது வரும் நிம்மதி, விருந்திற்குப் பின் சமையறையில் அடுக்கிக் கிடக்கும் அழுக்குப் பாத்திரங்களைப் பார்த்தால் பெண்களுக்குக் காணாமல் போய் விடும்.
அதனால் தான் மார்க்கெட்டில் விதவிதமான சமையல் பாத்திரங்களைக் கழுவும் திரவங்கள், சோப்புகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பாத்திரங்களை கழுவினால், பாத்திரங்கள் புதியது போல் பளபளப்பாக மாறும், கையும் பட்டுப்போல் இருக்கும் என விளம்பரங்களில் கூறப்படுகிறது. ஆனால் நிஜத்தில் கை வலித்து, அதற்கான மருந்துகளைத் தேடும் நிலையில்தான் பெண்கள் உள்ளனர்.

எளிய வழி...
ஆனால், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு மன அழுத்தத்தைக் குணமாக்குவதை விட எளிய வழி ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அது வேறொன்றுமில்லை அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களை அள்ளிப் போட்டு துலக்குவதுதான்.

பாத்திரம் கழுவுங்கள்...
இது அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாத்திரங்களைக் கவனமாகத் தேய்த்து சுத்தம் செய்யும் போது மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

லேசான மனம்...
சுமார் 51 மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதில் பலரும், தங்கள் கவனத்தை செலுத்தி பாத்திரங்களை தேய்த்து முடித்த போது மனம் லேசாக இருப்பதை உணர்ந்ததாகவும் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆடம் ஹேன்லி தெரிவித்துள்ளார்.

நிம்மதி...
இதில் 27 சதவீதம் பேருக்கு பெருமளவில் பதட்டம் குறைந்ததாக தெரிய வந்தது. அதேசமயம், 25 சதவீதம் பேருக்கு மனதளவில் நிம்மதி வந்ததாக தெரிய வந்ததாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications