உலகிலேயே கொடிய விஷ பாம்புகள் மட்டுமே "பிரஜைகளாக" வாழும் பிரேசில் தீவு!!
பிரேசிலா: உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே பிரஜைகள் வாழும் தீவு பிரேசில் நாட்டில் உள்ளது. இங்கு மனிதர்கள் நடமாடுவதற்கு பிரேசில் அரசு தடையும் விதித்துள்ளது.
பிரேசில் கடற்பரப்பில் இருக்கும் தீவுகளில் ஒன்றுதான் Ilha da Queimada Grande. இதுதான் பாம்புகளின் தீவு என்று சொல்லப்படுகிறது.

பிரேசில் முயற்சி
இந்தத் தீவில் பாம்புகளை அகற்றிட்டு வாழை சாகுபடி செய்து மக்களைக் குடியமர்த்த பல ஆண்டுகளாக பிரேசில் அரசு முயற்சித்தது. ஆனால் மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தி கொண்டதாம் இந்த பாம்புகள்.

மனிதர்களுக்கு தடை
இதனைத் தொடர்ந்து பிரேசில் அரசு தமது முயற்சியைக் கைவிட்டு இத்தீவுக்குள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

ஏராளமான பாம்புகள்
உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட "Golden Lancehead" வகை பாம்புகள் மட்டுமே இங்கு உள்ளனவாம். ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று முதல் 3 வரை வசிக்கின்றனவாம் இவை.

ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதி
தென் அமெரிக்காவில் 80% பாம்பு மரணங்களுக்கு இந்த பாம்புகள்தான் காரணமாம். அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு சில நேரங்களில் பிரேசில் அரசு அனுமதி கொடுக்கப்படுவதும் உண்டாம்.
நீங்கள் துணிச்சல்காரரா? ரிஸ்க் எடுக்க தயார் எனில் பாம்பு தீவுக்கு போகலாமே!












Click it and Unblock the Notifications